Skip to main content

பிரதமருக்கு தீர்மான நகல் அனுப்பிவைப்பு!!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
MODI

 

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு சட்டப்பேரவை நேற்று கூடியது.

 

இந்த சிறப்பு சட்டப்பேரவை விவாதத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்தவித கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேகதாதுவில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேகதாது விவகாரம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 அதேபோல் அணைகட்ட ஆய்வு மேற்கொள்ள கர்நாடக அரசு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்