Skip to main content

"செல்ஃபோன் டவரால் சிட்டுக் குருவிகளுக்கு ஆபத்து!" - வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

In senchi womens along with their child try to took wrong decision

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் சாலையில் உள்ளது மாதா கோவில் தெரு. இந்த தெருவில் செல்ஃபோன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முயற்சியில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

காரணம், செல்ஃபோன் டவர் அமைப்பதால் உண்டாகும் கதிர்வீச்சின் காரணமாக சிட்டுக்குருவி பறவை இனமே அழிந்து போய்விட்டது. மேலும் இந்த செல்ஃபோன் டவர் அமைந்துள்ள பகுதிகளில் பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதற்குக் காரணம் செல்ஃபோன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுதான். இப்படிப் பல்வேறு காரணங்களைக் கூறி செல்ஃபோன் டவர் அமைப்பதைக் கைவிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்படியும் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி நேற்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிலர் தீக்குளிக்க முயன்றனர். அதில், மும்தாஜ் யாஸ்மின், ஷம் சாத் ஹாஜிமா சய்தானி, ஷகுனா ஆகியோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.

 

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் வட்டாட்சியர் ராஜன் இடம் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தில் தற்போது டவர் அமைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தீக்குளிப்பு போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம் செஞ்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.