Skip to main content

செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக பொறியியல் மாணவர்கள்! 

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Semester Exam! Engineering students against Anna University!

 

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வுகளை, நேரடி தேர்வுகளாக டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

கரோனா பெருந்தொற்று பரவலால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கவில்லை. கரோனாவின் தாக்கம் சில மாதங்களாக குறைந்துள்ள நிலையில், கரோனா கட்டுப்பாடுகளிலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருக்கிறது.

 

இருப்பினும், பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் இதுநாள்வரை ஆன்லைன் வகுப்புகளையே நடத்திவருகின்றன. இப்போதுவரை நேரடி வகுப்புகள் துவக்கப்படவில்லை. இந்த நிலையில், செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக (ஆஃப்லைன்) நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதால் மாணவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், “பொறியியல் பாடங்கள் அனைத்தும் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் வழியாகத்தான் நடத்தப்பட்டுவருகிறது. ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்பட்டதால், முந்தைய வழிமுறைகளின்படியே இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்துவதுதான் சரியாகும். நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடி தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது எங்களுக்கு கவலையாக இருக்கிறது.

 

அதனால், நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆன்லைனில் நடத்தியிருப்பதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும். அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளை நேரடி வகுப்புகளாக அண்ணா பல்கலைக்கழகமும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளும் நடத்தட்டும். அதன்பிறகு நேரடி தேர்வுகளையும் நடத்தட்டும். இதனைப் பரிசீலிக்காமல், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு எங்களைக் கவலையடைய செய்கிறது. இந்த விசயத்தில் தமிழக அரசு தலையிட்டு மாணவர்களின் உணர்வுகளுக்கேற்ப ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக மதுரையில் மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்...” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anna University professors say they will struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழளளங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ரூட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட. 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம் (டீனிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.