Skip to main content

திமுக முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மறைந்தார்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் திருச்சியில் மறைந்தார்.

 

s

 

திருச்சி திமுக என்றாலே கலைஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம் தான் நினைவுக்கு வரும். அவர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்தார். அவருக்கு பின்பு திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்.செல்வராஜ்.   இவர் பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தில் 5 மே 1944 அன்று பிறந்தவர். இளம் வயது பொறியாளர். மிகுந்த நினைவாற்றல் உள்ளவர். 

 

செல்நம்பரை ஒருமுறை சொன்னால் போதும் அப்படியே மனதில் பதிந்து வைத்துக்கொள்ளுவார். இப்படி அவர் மனப்படமாக 2500க்கு மேற்பட்ட தனக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களை நினைவில் வைத்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.   மேடைகளில் பேசும்போது குறிப்புகள் எதுவும் இல்லாமல் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.   மேடையில் இருப்போரின் பெயர்களையும், கூட்டத்திற்கு வந்திருக்கும் முக்கியமானவர்களின் பெயர்களையும்  நினைவில் வைத்து பேசக்கூடியவர். 

 

s

 

திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் முத்திரையர் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், அந்த சமூகத்தில் செல்வாக்கான நபர் என்பதாலும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க.விற்கு மா.செ.வாக இருந்தவர். மாநாடு நடத்தியவர் என்கிற பெருமை பெற்றவர். 

 

இவர் மாவட்ட செயலாளாராக 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார். வைகோ கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வை விட்டு மதிமுகவிற்கு சென்றார். இதனால் தி.மு.க. மா.செ.வாக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார். 

 

s

 

பின்பு மீண்டும் தி.மு.க.விற்கு வந்த செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர் சில காலம் அமைதியாக இருந்தார். 

 

s

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அ.தி.முக.வில் இணைந்தவர் கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஜெ. மரணத்திற்கு பிறகு  உடல் நலக்குறைவால் அவருடைய மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அதன் பிறகு அவருடைய மகன் இரண்டு பேரும் திமுக. மா.செ. நேருவுடன் இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தனர். இந்த எம்.பி. தேர்தலுக்கு கே.என்.நேரு ஆசியுடன் பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

 

s

 

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு திருச்சி வந்திருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சி தில்லைநகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நலக்குறைவால் இருந்த செல்வராஜ்-ஐ பார்த்து அவர் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். 

 

என்.செல்வராஜ் இன்று மாலை 6.15க்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு இரண்டு மகன்கள் கருணைராஜா, கலைராஜ், 2 பெண்கள் மருத்துவம் படித்து இருக்கிறார்கள். அவர் மருமகன் ராஜரத்திரன் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.