Skip to main content

மான் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்; நாட்டுத்துப்பாக்கி வெடித்து தொழிலாளி பலி!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

 

s


கல்வராயன் மலைப்பகுதியில் மான் வேட்டைக்குச் சென்றபோது கைதவறி நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் தோட்டா பாய்ந்து, கூலித்தொழிலாளி பலியானார்.


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை கலகம்பாடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் செல்வராஜ் (45). கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை (நவ. 23) அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் பெரியசாமி, பூச்சி ஆகியோருடன் கல்வராயன் மலைப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றுள்ளார். 


இந்நிலையில், பூச்சியும், பெரியசாமியும் நேற்று இரவு செல்வராஜை சடலமாக கொண்டு வந்து வீட்டில் ஒப்படைத்துள்ளனர். நண்பர் ஒருவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து, செல்வராஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இத்தகவல், அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூர்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

se


மான் வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில், செல்வராஜ் பலியாகி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 


கலகம்பாடியைச் சேர்ந்த சிலர், அடிக்கடி கல்வராயன் மலைப்பகுதியில் மான் வேட்டைக்குச் செல்வது வழக்கம். இதற்காக அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகளை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நேற்று மாலை செல்வராஜ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவருடைய நாட்டுத்துப்பாக்கி கைதவறி வெடித்துள்ளது. 


அந்த துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா, செல்வராஜ் மீது பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பதற்றம் அடைந்த துப்பாக்கி வைத்திருந்த நபரும், கூட்டாளிகள் சிலரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


முதல்கட்டமாக பூச்சி (54), பெரியசாமி (55) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பாண்டியன் என்பவர் கையில் வைத்திருந்த துப்பாக்கிதான் வெடித்தது என்பதும், அவர் சுட்டபோதுதான் தோட்டா பாய்ந்து செல்வராஜ் பலியானதும் தெரிய வந்துள்ளது. தலைமறைவான பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

''அந்த நேரத்தில் இவர்கள் ஆப் டவுசரில் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்''-கோவை செல்வராஜ் பேட்டி!

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Coimbatore Selvaraj interview!

 

பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் செல்வராஜ், ''பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல அவரோடு இருக்கும் யாருக்கும் தகுதி கிடையாது. அவர் அதிமுகவில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது இவர்களெல்லாம் ஆப் டவுசர் போட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்திருப்பார்கள். இவர்களுக்கு அரசியலே தெரியாது. அவர் செய்யும் அரசியல் என்ன இவர்கள் செய்யும் அரசியல் என்ன. அவர் எம்ஜிஆரோடு அரசியல் செய்தவர். அறிஞர் அண்ணா பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை பார்த்து, 'முகத்தை காட்டினால் எம்ஜி.ராமச்சந்திரனுக்கு ஓட்டு, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினால் மக்களின் ஓட்டு' என்று சொல்லி அன்னைக்கே இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். திமுகவில் 26 வயதில் எம்.எல்.ஏ ஆனார் 1967ல். அப்படிப்பட்ட இவரை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

 

Next Story

“இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல்” -  நாகை எம்.பி. செல்வராசு

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Selling an insurance company to a private company is a very, very bad thing Nagai MP Condemnation

 

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல், ஆபத்தமான முடிவு என்கிறார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு. மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள எல்ஐசி பங்கு விற்பனை மற்றும் எல்ஐசி சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், நாடாளுமன்றத்தில் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் திருவாரூரில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுவிடம் மனு  அளித்தனர். 

 

மனுவை பெற்றுக்கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களை வஞ்சிப்பது மட்டுமல்லாமல் நிராகரிக்கும் செயலில் அமைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கையில் இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்நிய மூலதன நிறுவனத்தின் கட்டளையை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே செயல்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 74% அந்நிய மூலதனத்தைத் திணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது கோடான கோடி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

 

ரயில்வே துறை, ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி மட்டுமல்லாமல் மேலும் இரு வங்கிகளைத் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருக்கும் செயல் மோசமானது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல்," என்றார்.