Skip to main content

குடவாசலில் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா விற்பனை; ஒருவர் கைது!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

திருவாரூரில் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த ஒருவர் ஐந்து கிலோ கஞ்சாவுடன் போலிஸில் பிடிப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், அங்குள்ள இளைஞர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் கொடுத்தவரிடமே முழு விவரங்களையும் அறிந்துகொண்ட காவலர்கள் விற்பனை செய்யும் நபரை பிடிக்க விரைந்தனர்.

 

 Selling cannabis at school colleges in Gudavasal; One arrested!

 

குடவாசல் அருகே உள்ள ஒகை சிவன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (33) என்பவர் விற்பனை செய்த கஞ்சா பொட்டலங்களோடு கைது செய்து குடவாசல் காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். அதில் குடவாசல், நாச்சியார்கோவில், திருச்சேறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்தது. மேலும் அவனிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, வருகின்ற 19.8.19 தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்திரவிட்டார். இந்த உத்திரவின்படி திருச்சி மத்திய சிறையில் இளையராஜா அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட இளையராஜா மீது மேலும் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.