Skip to main content

நிலத்தை விற்றுப் பணம் கட்டு..! விவசாயிகளை மிரட்டும் வங்கி அதிகாரி..?

Published on 23/09/2020 | Edited on 24/09/2020

 

Sell ​​the land and make money ..! Bank official intimidating farmers ..?

 

கரோனா தொற்றால் அனைத்துத் தொழிலும் முடங்கியுள்ள அதே வேளையில் விவசாயம் மட்டும் விதிவிலக்கா..? விவசாயிகளை அழிக்கும் நோக்கில் செயல்படும் பல வங்கிகள் உண்டு. வாங்கிய கடனுக்காக உயிரைவிட்ட பல விவசாயிகளின் கண்ணீர் கதை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

 

கரோனா தொற்று காரணமாக கட்டாயக் கடன் வசூலுக்குத் தடை உத்தரவுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்த நிலையில், அதனை வங்கிகள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்ற விவசாயிடம், குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்துள்ளது ஒரு தனியார் வங்கி. மேலும், கடன் தொகையைச் செலுத்த முடியாவிட்டால், 'நிலத்தை விற்றுப் பணத்தைக் கட்டு' என்று தாகாத வார்த்தையில் மிரட்டியுள்ளனர். 


இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி தட்சிணாமூர்த்தி, "நான் பிறந்ததில் இருந்தே விவசாயி. இதைவிட்டால் எனக்கு வேறு வேலை தெரியாது. எனக்கு இருக்கும் பூர்வீக நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடன் வாங்கினேன். ஆறு மாததிற்கு ஒருமுறை 60,000 ரூபாய் தவணையும் கட்டி வந்தேன். 


கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று காரணமாக வருமானமே இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்தநிலையில், "கடந்த செப்டம்பர் 10 -ஆம் தேதி வங்கி அதிகாரி ஒருவர் பாலாஜி என்ற பெயரில் ரவுடி போல வந்து பணம் கட்டச்சொன்னார், நானோ வருமானமே இல்லை அரசு கூறியுள்ளதைப் போல, இரண்டு மாதம் கழித்து தவனைத் தொகையைக் கட்டுகிறேன் என்றேன். அந்த நபர் என் வயதைக் கூட பார்க்காமல் மிகுந்த கேவளமான வார்த்தையில் திட்டிவிட்டு, 'பணம் கட்ட வக்கில்லனா நிலத்தவித்து பணத்தகட்டு'னு மிரட்டினார். 

 

ஊரே பாத்துச்சு எனக்கு செத்துப் போயிடலாமானு தோனுச்சு. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்துல புகார் கொடுத்தேன். உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் இதுவரை விசாரிச்சு வழக்குப் பதிவு செய்யாம காலம் தள்ளிட்டே இருக்காரு" என்றார். 

 

Ad

 

வழக்குத் தொடர்பாக கும்மிடிப்பூண்டி உதவி ஆய்வாளர் ராஜேந்திரனிடம் பேசினோம், "புகார் மனு மீது சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டுவிட்டது. விசாரணைக்காக இருதரப்பையும் அழைத்துள்ளோம் விசாரணைக்குப்பின் நடவடிக்கை எடுப்போம்” என்று தொடர்பைத் துண்டித்தார்.

 

மாவட்ட எஸ்.பி அரவிந்தனை தொடர்பு கொண்டோம், அவர் போன் பிஸி..!

 

இது தொடர்பாக வங்கி கலக்ஷன் டீம் வினோத்திடம் பேசினோம் "கடன் தவணைக் கட்டாதவர்கள் லீஸ்ட் எங்களுக்கு பேங்கில் இருந்துவரும். வசூல் செய்யறுது எங்க வேலை. மொதல்ல அவர்தான் தப்பா பேசியிருக்காரு. எங்க டெலிகாலர் போன்ல பேசினா நாங்க பொருப்பில்ல” என்றார் கனத்த குரலில். என்ன தான் சட்டம் போட்டலும் சரி, திட்டம் போட்டாலும் சரி விவசாயிகளின் பிரச்சனையில் கிணறில் விழுந்த கல் மாதிரி தான் போலீஸ் நடவடிக்கை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.