Skip to main content

சுயமரியாதை தான் முக்கியம்! வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை! சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்!

Published on 28/01/2020 | Edited on 31/01/2020

திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மகப்பேறியல் துறைத்தலைவர் பேராசிரியை பூவதி ஸ்ரீீீஜெயந்தன் 27.01.2020 காலையில் நடந்த வீடியோ கான்பரசிங் போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷின் சில கேள்விகள் மன உளைச்சல் அடைந்து தீடீர் என  மேடம் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் இருந்து திடீரென வெளியேறினார்.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary



சிறந்த நேர்மையான மகப்பேறு  பேராசிரியை பணியை மிகச்  சரியாக செய்பவர் என்று அறியப்பட்ட பூவதியின் இந்த செயல் அரசு மருத்துவர்கள் வெளியே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை மருத்துவர் பூவதி  வாட்ஸ்அப் பதிவு செய்தது இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதன் தமிழாக்கம்.

 

"எனது வருத்தத்தை இங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. நான் செய்த வேலையை விளக்க விரும்பவில்லை. டெர்மினல் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கும், நிர்வாகத்திலிருந்து செய்யப்படும் விஷயங்களை நிறைவேற்றுவதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நான் அனுபவித்த மன அழுத்தத்திற்கு நிச்சயமாக எனது ஆயுட்காலம் குறைகிறது.

இப்போதெல்லாம் வலுவான சங்கத்துடன் இருக்கும் பணியாளர், செவிலியர்களிடமிருந்து வேலையைப் பெறுவது மிகவும் கடினம். இன்று வி.சி.யில் விவாதிக்கப்பட்ட ஒரு மரணத்திற்கு என் பங்கில் அலட்சியம் இல்லை. என் மீது குற்றம்சாட்ட எங்கள் மதிப்பிற்குரிய எச்.எஸ் மேடமின் அறிவுறுத்தல்களுக்காக நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary

 

திறந்த மன்றத்தில் இது எனக்கு கிடைத்த வெகுமதி என்றால், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. ஒரு அரசு ஊழியரைக் காட்டிலும் எனது சொந்த சுயமரியாதை மற்றும் சுயமரியாதை எனக்கு உண்டு. குறைந்த பட்சம் என்னை வி.ஆர்.எஸ்ஸில் செல்ல அனுமதிக்கவும். இனிமேல் சேவையில் தொடர முடியாது. யாரும் குற்றம்சாட்டப்படக் கூடாது.

இதுபோன்ற மோசமான தருணங்களை எதிர்கொள்வதும் எனது தவறான செயல். கடவுள் பதிலளிப்பார்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.

HOD OBG (தற்போது)
திருச்சி மருத்துவக் கல்லூரி.


இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலரிடம் பேசியபோது ,

இந்த வீடியோ கான்பரன்சிங் வாரம் தோறும் நடக்கும். வாரந்தோறும் அரசு டாக்டர்கள் யாரையாவது சஸ்பெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர் .

ஒரு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, அவர்களின் மரணம் தொடர்பான அவர்களது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்க வேண்டும். அவரிடம் தான் இந்த தகவல் இருக்கும் இதை மருத்துவ கல்லூரியில் உள்ள துறைத் தலைவரிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள்.

இது சம்பந்தம் இல்லாத கேள்வி ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் அவசர காலத்தில் நேரடியாக போய் சிகிச்சை செய்வது இத்துடன் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்துவது தான் துறைத் தலைவரின் பணி. இது தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள முடியாது.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary

 

சுகாதாரத்துறை இணை துணை இயக்குனரிடம் கேட்க வேண்டிய கேள்வியை துறைத் தலைவரிடம் கேட்டு நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் வேறு என்ன செய்யமுடியும் அதனால்தான் பேராசிரியை பூவதி ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து எழுந்து சென்றார்.

இது தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தமே இல்லாத துறைகளின் விளக்கம் கேட்கும் சஸ்பெண்ட் செய்வதில் குடைச்சல் கொடுப்பது பலரும் அரசு பணியை விட்டு விலகும் மனநிலையில் உள்ளனர்.

ஏற்கனவே பல மருத்துவ கல்லூரிகளுக்கு போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லை என்ற நிலையில் தற்போது பேராசிரியர்களை விரட்டும் மனநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் சங்கத்தினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.