Skip to main content

சுயமரியாதை தான் முக்கியம்! வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை! சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்!

Published on 28/01/2020 | Edited on 31/01/2020

திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மகப்பேறியல் துறைத்தலைவர் பேராசிரியை பூவதி ஸ்ரீீீஜெயந்தன் 27.01.2020 காலையில் நடந்த வீடியோ கான்பரசிங் போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷின் சில கேள்விகள் மன உளைச்சல் அடைந்து தீடீர் என  மேடம் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் இருந்து திடீரென வெளியேறினார்.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary



சிறந்த நேர்மையான மகப்பேறு  பேராசிரியை பணியை மிகச்  சரியாக செய்பவர் என்று அறியப்பட்ட பூவதியின் இந்த செயல் அரசு மருத்துவர்கள் வெளியே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை மருத்துவர் பூவதி  வாட்ஸ்அப் பதிவு செய்தது இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதன் தமிழாக்கம்.

 

"எனது வருத்தத்தை இங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. நான் செய்த வேலையை விளக்க விரும்பவில்லை. டெர்மினல் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கும், நிர்வாகத்திலிருந்து செய்யப்படும் விஷயங்களை நிறைவேற்றுவதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நான் அனுபவித்த மன அழுத்தத்திற்கு நிச்சயமாக எனது ஆயுட்காலம் குறைகிறது.

இப்போதெல்லாம் வலுவான சங்கத்துடன் இருக்கும் பணியாளர், செவிலியர்களிடமிருந்து வேலையைப் பெறுவது மிகவும் கடினம். இன்று வி.சி.யில் விவாதிக்கப்பட்ட ஒரு மரணத்திற்கு என் பங்கில் அலட்சியம் இல்லை. என் மீது குற்றம்சாட்ட எங்கள் மதிப்பிற்குரிய எச்.எஸ் மேடமின் அறிவுறுத்தல்களுக்காக நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary

 

திறந்த மன்றத்தில் இது எனக்கு கிடைத்த வெகுமதி என்றால், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. ஒரு அரசு ஊழியரைக் காட்டிலும் எனது சொந்த சுயமரியாதை மற்றும் சுயமரியாதை எனக்கு உண்டு. குறைந்த பட்சம் என்னை வி.ஆர்.எஸ்ஸில் செல்ல அனுமதிக்கவும். இனிமேல் சேவையில் தொடர முடியாது. யாரும் குற்றம்சாட்டப்படக் கூடாது.

இதுபோன்ற மோசமான தருணங்களை எதிர்கொள்வதும் எனது தவறான செயல். கடவுள் பதிலளிப்பார்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.

HOD OBG (தற்போது)
திருச்சி மருத்துவக் கல்லூரி.


இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலரிடம் பேசியபோது ,

இந்த வீடியோ கான்பரன்சிங் வாரம் தோறும் நடக்கும். வாரந்தோறும் அரசு டாக்டர்கள் யாரையாவது சஸ்பெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர் .

ஒரு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, அவர்களின் மரணம் தொடர்பான அவர்களது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்க வேண்டும். அவரிடம் தான் இந்த தகவல் இருக்கும் இதை மருத்துவ கல்லூரியில் உள்ள துறைத் தலைவரிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள்.

இது சம்பந்தம் இல்லாத கேள்வி ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் அவசர காலத்தில் நேரடியாக போய் சிகிச்சை செய்வது இத்துடன் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்துவது தான் துறைத் தலைவரின் பணி. இது தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள முடியாது.

 

Self esteem is important! not need Government Doctor job;Government doctor announces resignation of Health Secretary

 

சுகாதாரத்துறை இணை துணை இயக்குனரிடம் கேட்க வேண்டிய கேள்வியை துறைத் தலைவரிடம் கேட்டு நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் வேறு என்ன செய்யமுடியும் அதனால்தான் பேராசிரியை பூவதி ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து எழுந்து சென்றார்.

இது தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தமே இல்லாத துறைகளின் விளக்கம் கேட்கும் சஸ்பெண்ட் செய்வதில் குடைச்சல் கொடுப்பது பலரும் அரசு பணியை விட்டு விலகும் மனநிலையில் உள்ளனர்.

ஏற்கனவே பல மருத்துவ கல்லூரிகளுக்கு போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லை என்ற நிலையில் தற்போது பேராசிரியர்களை விரட்டும் மனநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் சங்கத்தினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.