தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 450 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.