Advertisment

சீமானுக்கு போராட்டம் நடத்த மட்டுமே தெரியும்: எடப்பாடி பழனிசாமி

சீமான் எப்பொழுதும் போராட்டம் மட்டுமே நடத்துவார். தீர்வுக் காண வழி சொல்ல மாட்டார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் மக்கள் போரட்டம் அதிகமாக நடந்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சீமான கூறியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

Advertisment

சீமான் எப்பொழுதும் போராட்டம் மட்டுமே நடத்துவார். தீர்வுக்காண வழி சொல்ல மாட்டார். இன்றைய தினம் அதிமுக அரசு காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். காவிரி நதி நீரின் உரிமையை பெற்று தந்துள்ளோம்.

வேளாண்மை துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறோம். இதையெல்லாம் பேசவே மாட்டார்கள். எனெனில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை நிலை அது அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

eps seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe