சென்னை மெரினா லூப் சாலை நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை உள்ள மீன் கடைகள் மற்றும் உணவகங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (18.04.2023) தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடையே வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
மேலும் மீன் கடைகளை அகற்றியதை கண்டித்தும், உயர்நீதிமன்ற உத்தரவைத்திரும்பப் பெற வலியுறுத்தியும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் சீனிவாசபுரம் மீனவ கிராம மக்கள் மற்றும் முள்ளி மாநகர் மீனவ கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.