Skip to main content

“பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது” - சீமான் 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Seeman addressed press after may 1 celebration

 

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அண்ணாமலை தன்னை தானே கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என சொல்லி அடையாளப்படுத்திக்கொள்கிறார். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளில் தலைவர் என சொல்ல முடியாது. ஏறக்குறையை ஒருவரை இரண்டுவருடங்கள் வைப்பார்கள். பிறகு வேறு ஒரு நபரை தலைவராக்குவார்கள். பொன் ராதாகிருஷ்ணன் எங்கே? அவர் கட்சிக்காக உழைக்காததா. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு என காங்கிரஸுக்கு பல தலைவர்கள். இந்திய ஒன்றிய கட்சிகள் எந்த மாநிலத்திலும் நிரந்தரமாக ஒரு தலைவரை வைக்காது. அதுவெல்லாம் பெருந்தலைவரோடு முடிந்துவிட்டது. அதிகபட்சம் அண்ணாமலையை இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை இழுத்துவருவார்கள். அதன் பின் அதில் ஏதும் முன்னப்பின்ன ஆனதென்றால் அவரை மாற்றிவிட்டு புதியதாக ஒரு தலைவரை கொண்டுவருவார்கள்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவரை ஆடையெல்லாம் கலைத்து சோதனை செய்தார்கள்’ என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், “இது மிகவும் கொடுமையானது. மானுட உரிமைக்கே எதிரானது. இன்னும் சிறை கூடங்களில் இவையெல்லாம் இருக்கிறது. நாங்கள் எல்லாம் சிறைக்கு செல்லும்போது, உடைகளை எல்லாம் கலைத்து நிர்வாணப்படுத்தி சோதித்து தான் அனுப்பினார்கள். நான் ‘அப்படியே உள்ளே போகிறேன்’ என்றேன். மக்களுக்காக போராடுபவர்களை ஏதோ சர்வதேச பயங்கரவாதி போல் நிர்வாணப்படுத்தி சோதிப்பார்கள்” என்றார். 

 

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்களின் வரலாற்றை மிகவும் இழிவாக எடுத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுகிறதே’ என்று கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு பதில அளித்த சீமான், “இதை இவ்வளவு ஆய்வு செய்யவேண்டியது இல்லை. அது ஒரு புதினம். பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது. கற்பனையில் அதனை எழுதும்போது அதனை திரிவுடன் தான் எழுதினார்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.