பாலியல் கொலை குற்றவாளிகளை விட்டுட்டு கோலம் போட்டவர்களை கைது செய்வதுதான் இந்த நிர்வாகம்-சீமான் விமர்சனம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு Against CAA, Against NRC என எழுதி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

seeman about CAA

இதில்பெசன்ட் நகரில் பொது இடம்,வீட்டு வாசலில் கோலம் போடும் போராட்டம் நடத்திய 6 பெண்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த கைது குறித்த கேள்விக்கு, கொலை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு கோலமிட்டவர்களை கைது செய்வதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம் என சீமான் விமர்சித்தார்.

citizenship amendment bill naam tamilar seeman
இதையும் படியுங்கள்
Subscribe