Skip to main content

சீமான் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை? காங்., கேள்வி

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீப லஷ்மிக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

 

ன்

 

அப்போது அவர் காங்கிரசை தலையில்லா முண்டம் என்று விமர்சித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தது பாஜகவிற்கு  பயந்து அல்ல என்பதை சீமான்  புரிந்துகொள்ளவேண்டும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதச்சார்பற்ற கொள்கை உடைய கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணி வர வேண்டும் என்ற எண்ணத்திலும் தான் ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்தார்கள். கண்டிப்பாக இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கண்டிப்பாக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினுடைய வேட்பாளருக்கு ஓட்டு போட்டு வெற்றிபெற வைப்பார்கள்.

 

காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கின்றது என்று சீமான் கூறியது  கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் தோல்வியை ஏற்று காந்திய வழியில் இளம் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்திலும் அப்படியே ராஜினாமாவை ஏற்காத அனைத்து தலைவர்களும் அவர் தான் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுவரையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

 

நீங்கள் தான் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தீர்கள். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை சீமான் ஆகிய நீங்கள் போது தேர்தலில் போட்டி இட்டுள்ளீர்கள். போட்டியிட்டவர்கள் நீங்கள் ஜெயித்தவர்கள் உண்டா, இதுவரையில் ஜெயிக்காத சீமான் அவர்களே! நீங்கள் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. 

 

வருமானத்துறைக்கு அச்சப்படும் அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களும்  காங்கிரஸை சேர்ந்தவர்களும் மக்கள் விரோத ஆட்சி நடத்த வில்லை. மக்களுடைய பணத்தை பதுக்க வில்லை. ஊழல் செய்யவில்லை. அதனால் தான் மதசார்பற்ற கூட்டணி ஒன்றை அமைத்து இந்த கருப்பு பணத்தை மீட்போம் என்று சொல்லி பாரதிய ஜனதா கட்சி அரசு கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு அதனை லஞ்சமாக கொடுத்து கர்நாடக அரசையும் கவிழ்த்து ஆட்சியிலே வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றார். என்பது உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 

 

திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் இருக்காது என்று அரசியல்  காழ்ப்புணர்ச்சி காரணமாக சீமான் பேச்சின் மூலம் தெரிகின்றது.  வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்கும்.

 

உருது பேசுகின்ற இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்துச் சொன்னவர் சீமான். அப்பேர்பட்ட உருது பேசுகின்ற முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்ற வேலூர் பாராளுமன்றத்திலே யாரிடம் நீங்கள் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன் என்பது உங்களால் விளக்க முடியுமா? இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இஸ்லாமியர்கள் இந்த நாட்டினுடைய தமிழன் என்ற கர்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அரசியல் காரணமாக உருது பேசுகின்ற முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னவர்தான் இந்த சீமான் என்பதை இங்குள்ள இஸ்லாமியர்கள்  புரிந்து கொள்ள வேண்டும். ’’என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்