Skip to main content

ரகசியமாக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தபால் வாக்கு போட்ட போலிஸார்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

மதுரை பாராளுமன்ற தேர்தலில் போலிஸாருக்கான தபால் ஓட்டு பதிவு புதன் அன்று காலை காவல்துரை ஏ.ஆர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. அது திடீரென மதுரை மீனாட்சி கல்லூரிக்கு மாற்றபட்டு, காலை 9 மணிக்கு தொடங்கியது..

 

மதுரை நகர் போலிஸார் 1912ம் புறநகர் போலிஸாரும் சேர்த்து 2815 பேர் வாக்களிக்க இருந்தனர்.

 

election

 

சிறிது நேரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வாக்கு நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை உள்ளே அழைத்து வந்த காவல்துறை அதிகாரிகளிடம் வெகுநேரம் பேசிகொண்டிருந்தார். பின்பு அங்கு ஓட்டு போட நின்று கொண்டிருந்தவர்களிடம் வாக்கு கேட்டார். அதை படம் பிடிக்க நாம் முயன்றபோது நம்மை போலிஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றதை பற்றி போலிஸாரிடம் கேட்டதற்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என்க..

 

election

 

நாம் ராஜ்சத்தியனிடம் விதியை மீறி ஓட்டு கேட்கலாமா? என்க அதற்கு சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதை ஆட்சியர் நடராசனிடம் கேட்டோம் அதற்கு அவர் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவு மையத்தை பார்வையிடலாம் ஆனால் ஓட்டுதான் சேகரிக்க கூடாது எனக்கூறினார். அதிமுகவேட்பாளர் ''ஓட்டு கேட்டாரா அப்படி எதுவும் புகார் தெரிவிக்கவில்லையே யாரும்'' என்று வேகமாக இடத்தை காலி செய்தார் கலெக்டர் நடராசன்.

 

 

நாம் இதுகுறித்து கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனிடம் தொடர்புகொண்டு கெட்டபோது, இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டபடி நடவடிக்கை எடுக்க வழியுறுத்துவோம். மேலும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவமே கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ஜக்டோ ஜியோ மற்றும் அரசு பணியாளர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்ற யூகத்தால் அவர்களை இழுத்தடிப்பது பற்றியும் சட்டபடி கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். சிலைக்கு மாலை போட்டதற்கே என் மேல் வழக்கு போட்டவர்கள் தேர்தல் விதி மீறி ராஜ்சத்யன் போலிஸாரிடம் ஓட்டு கேட்டதும், அவரை  போலிஸாரே உள்ளே அழைத்து சென்று கேன்வாஸ் செய்ததும் என்ன நியாயம் இதை சும்மா விடமாட்டோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்  என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.