சென்னையில் தனியார் மருத்துவமனை பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா- ஊழியர் கைது!!

 Secret camera of women restroom in private hospital in Chennai - Employee arrested!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிட்னிமருத்துவமனையில் பெண்கள் உபயோகிக்கும் கழிவறையில் மறைமுகமாக ஒளித்து வைக்கப்பட்ட கேமரா பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரைகைதுசெய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆர் பி ஸ்கேன் என்று கிட்னியில் உள்ள கல்லை நீக்கி சிகிச்சையளிக்கும்தனியார் மருத்துவமனையில் இன்று மாலை பெண் ஒருவர் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்ற அந்தப் பெண் இந்த அறையில் ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்ட கேமராக்கள் உள்ளதா என சந்தேகித்துள்ளார்.அண்மையில் சென்னையில் தனியார் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது அதேபோல் இந்த அறையிலும் கேமராக்கள் இருக்குமோ என்ற பயத்தில் தனது மொபைலில் உள்ள ரகசிய கேமராவை கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.

அப்பொழுது அந்த அறையில் ரகசிய கேமரா வைத்திருப்பது தெரிந்தது. அதனையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்த பெண் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போலீசார் மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர். மேலும் அதில் பல்வேறு பெண்களின் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டது தெரியவரஅந்த கேமராவை பொருத்தும் நபரும் அந்த கேமராவில் பிடிபட்டுள்ளார். அந்த கேமராவை பொருத்திய மருத்துவமனை ஊழியரான பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

camera hidden police
இதையும் படியுங்கள்
Subscribe