Skip to main content

ஒரே கடையில் நடைபெற்ற இரண்டாவது கொள்ளை!! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
Second robbery in the same store

 

சமீப காலமாக டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்தும் பக்கவாட்டு சுவர்களில் துளையிட்டும் உள்ளே புகுந்து மது பாட்டில்களையும் அங்கிருக்கும் பணத்தையும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. இந்தக் கடையில் சூப்பர்வைசராக உள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. இவரும் இவரது உதவியாளரான குமார் என்பவரும் வழக்கம்போல் டாஸ்மாக் கடை சரக்கு விற்பனை பணி முடிந்து மாலை 6 மணி அளவில் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

இந்த நிலையில், நேற்று (22.06.2021) அதிகாலை டாஸ்மாக் கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு ஒலக்கூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதோடு கடையின் சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவரும் கடைக்கு விரைந்து வந்து அங்கிருந்த மதுபாட்டில்களைக் கணக்கெடுத்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த 55 அட்டை பெட்டிகளில் 2,872 மதுபாட்டில்கள் இருந்துள்ளன.

 

அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார் கடை விற்பனையாளர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த நேரத்தில் யாரோ சில மர்ம மனிதர்கள் மினி வேனில் வந்து டாஸ்மாக் சரக்கைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மினி லாரி வந்ததற்கான தடம் தரையில் பதிவாகியிருந்ததைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதன் அடிப்படையில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். இந்தச் சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.