Local elections

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00மணிக்குத்தொடங்கியநிலையில் தற்பொழுது நிறைவடைந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சிவார்டுஉறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றியவார்டுஉறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சிவார்டுஉறுப்பினர்பதவியிடங்களுக்கும்இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்பொழுது நிறைவடைந்து.

Advertisment

இரண்டு கட்டமாக நடைபெற்றஉள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள்அக்.12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.உள்ளாட்சித்தேர்தலில் 6 மணிக்குள்வந்தவர்களுக்குடோக்கன்வழங்கப்பட்டது. இந்நிலையில்டோக்கன்பெற்றவாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களதுவாக்குகளைச்செலுத்தி வருகின்றனர். முதல்கட்டமாக 39 ஒன்றியங்களில் நடைபெற்றவாக்குபதிவில்77.43 சதவிகிதம்வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.