9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாகவும், நேற்று 9 ஆம் தேதி இரண்டாம்கட்டமாகத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்காணைஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோழன் பூண்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள்போட்டிப்போட்டுக்கொண்டு வாக்குச்சாவடி முன்பு ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். போட்டி வேட்பாளர்கள்இதனைத்தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர்கல்வீசித்தாக்கியதாகக்கூறப்படுகிறது. இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. தகவல் அறிந்தபோலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கபோலீசார்பாதுகாப்புக்குக்குவிக்கப்பட்டனர்.
செஞ்சி அருகே உள்ளஅன்னியூர்கிராமத்தில் மாலை 5 மணிக்கு மேல்ஓட்டுபோட வந்த பொதுமக்களைபோலீசார்உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குச்சாவடி மீதுசரமாரியாகக்கல்வீசித்தாக்கியுள்ளனர். இதனால்அங்குப் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்துவிக்கிரவாண்டிதாசில்தார்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மற்றும்போலீசார்அந்த கிராமத்துக்குச் சென்றுநிலைமையைச்சமாளித்தனர்.
தியாகதுருகம்ஒன்றியம்வாரியங்காவல்ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ஒரு பெண் வேட்பாளர்அங்கம்மாள். இவர் தனது குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குதமது வாக்கைஅளிக்கச்சென்றுள்ளார். அப்போது இவரது பெயர் வரிசையில் வாக்காளர் பட்டியலில் சீல் குத்தப்பட்டு அது தபால்வாக்காகப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் தனதுவாக்கைச்செலுத்த முடியாதா எனக் கேட்டுவேட்பாளர்அங்கம்மாள்கதறி அழுதுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை செய்ததில் அதேகிராமத்தைச்சேர்ந்த ஆசிரியர் மணிமேகலை என்பவர் தபால்வாக்குப்பதிவு செய்த படிவத்தில் வரிசைஎண்ணைத் தவறுதலாகஅங்கம்மாள் வாக்காளர் வரிசைஎண்ணைக்குறிப்பிட்டதால் மணிமேகலை என்பதற்குப்பதிலாக அங்கம்மாள்என்பவரின் வரிசையில் மாறி பதிவு செய்துள்ளார். இதையடுத்துஅங்கம்மாள்வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டுஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுமேகராஜ்என்பவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுமார் 11 பேருடன் வாக்களிக்க வந்தார். அப்பொழுது வாக்குச்சாவடி அலுவலர்கள்அவமானப்படுத்தியதாகக்கூறப்படுகிறது. அந்த வேதனை தாங்க முடியாமல் மேகராஜன்தன் கையில்பெட்ரோல் பாட்டிலுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்துஅங்குப்பாதுகாப்புக்கு இருந்தபோலீசார் மேகராஜனைசமாதானப்படுத்திபெட்ரோல்பாட்டிலை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.
சின்னசேலம்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளகூகையூர்ஊராட்சிக்கு உட்பட்ட வீரபயங்கரம் வாக்குச்சாவடி பணியிலிருந்த ஊழியர்கள் சிறுவலூர்ஆறுமுகம்,நமச்சிவாயபுரம் தனபால், அத்திப்பாக்கம் சிலம்பரசன்,அசகளத்தூர் ஆறுமுகம், தியாகதுருகம் தமிழரசன்,சின்னசேலம் மணி,கடுவனூர் ஜெயராமன் உள்ளிட்ட ஆகியஎட்டுபேர் வாக்குச்சாவடி மையத்தில்பணியிலிருந்தனர். மாலை வாக்குப்பதிவு முடிந்தது வாக்குப் பெட்டிஎடுத்துச்செல்வதற்குள் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதனால் வாக்குச்சாவடிஅருகிலிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவால் வாக்குச்சாவடிமையத்திலிருந்தமின்சாரசுவிட்ச்போர்டுகள் வெடித்துசிதறியுள்ளது. இதில் ஏற்பட்டகரும்புகை காரணமாக உள்ளே இருந்த ஏழு அலுவலர்களும் புகையில் சிக்கி மயக்கமடைந்துள்ளனர். இருந்தும் சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் தப்பியது. இதில் அலுவலர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவலறிந்தசின்னசேலம்ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்பழனிவேல்ஆகியோர் சம்பந்தப்பட்டவாக்குச்சாவடிக்குச்சென்று பாதிக்கப்பட்ட அலுவலர்களை மீட்டுசின்னசேலம்அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்குக்கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கிருந்தவாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டி பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படிப்பட்ட சில சில சம்பவங்களுடன் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்சுமூகமாகநடந்து முடிந்துள்ளது.