ADVERTISEMENT

தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம்... இஸ்ரோ சிவன் பேட்டி

12:27 PM Jan 01, 2020 | kalaimohan

சந்திரயான்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சந்திரயான் -2 திட்டத்தை தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவன், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

சந்திரயான் -2ல் லேண்டர் நிலவின் பரப்பில் வேகமாக மோதியதால் லேண்டர் தரையிறக்க முடியவில்லை. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனை பாராட்டுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT