Skip to main content

“இரண்டாவது தலைநகரம்; திருச்சிக்கு அடிப்படை‌ வசதிகள் தர அரசு தயாராகிவிட்டது..” - அமைச்சர் கே.என். நேரு 

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

“The second capital; The government is ready to provide basic facilities to Trichy. ”- Minister KN Nehru

 

இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைமுறைக்குவந்துள்ளது. தமிழ்நாட்டில், இன்று காலை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. அந்தவகையில், திருச்சியில் நடைபெற்றுவரும் சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை திருச்சி புத்தூர் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “15 வயது முதல் 18 வயது வரையிலான 1,26,400 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு தேவையில்லை. பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்‌ என முதல்வர் தெரிவித்துள்ளார். தியேட்டர்கள், மால்களில் 50% பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புத்தாண்டு என்ற காரணத்தால் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வீட்டிலிருந்து வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

 

ஒமிக்ரான் வைரஸிற்க்கு ஆக்ஸிஜன் தேவைப்படாது. இருப்பினும் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும். ரூ. 90 கோடி மதிப்பில் காவிரியில் புதிய பாலம் கட்ட முதல்வர்‌ உத்தரவிட்டுள்ளார்.

 

இரண்டாவது தலைநகரம் என்று சொல்லாமலேயே திருச்சிக்கு அடிப்படை‌ வசதிகள் தர அரசு தயாராகிவிட்டது. மணப்பாறையில்  சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து தர தொழில்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்து தருகிறேன் என்றார். மேலும் இராணுவத் தளவாடங்கள் எல்லாம் திருச்சிக்கு கொண்டு வருகிறேன்‌ என்று கூறியுள்ளார். அரைவட்ட சாலை முழுமையடைந்ததும் திருச்சிக்கு புது வியாபாரம் கிடைக்கும்.

 

இரண்டாவது தலைநகரம்‌ என்று சொல்லி அரசு அலுவலகங்கள் வருவதற்கு தாமதம் ஆகலாமே தவிர அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஒரு வருடத்தில் முடிந்து பேருந்து நிலையம் செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அடுத்த வருடம் மணப்பாறைக்கும், துறையூருக்கும் கல்லூரிகள் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.