Skip to main content

சீட் கொடுக்கவில்லை... கூண்டோடு ராஜினாமா செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள்!

Published on 04/02/2022 | Edited on 05/02/2022

 

The seat was not given ... AIADMK who resigned with the cage. Administrators!

 

தேனி மாவட்டம், பெரியகுளம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊராகும். இந்த நகராட்சியின் 6- வது வார்டில் சகுந்தலா என்பவருக்கு அ.தி.மு.க. சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. 

 

இந்த நிலையில் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்ட சகுந்தலா என்பவர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். பின்னர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை கூட பெறாத நிலையில், தற்பொழுது பெரியகுளம் நகராட்சியின் 6- வது வார்டில் அ.தி.மு.க.  சார்பில் போட்டியிட வழங்கப்பட்டுள்ளது. 

The seat was not given ... AIADMK who resigned with the cage. Administrators!

இந்நிலையில், பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க.வின் 6- வது வார்டு செயலாளர், இணைச் செயலாளர், பிரதிநிதிகள், மேலவை பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த பெத்தனசாமி, லதா, நாகராஜன், முருகன், சீத்தாலட்சுமி, லட்சுமி, அர்ஜுன் உள்ளிட்ட 9 பேரும் அ.தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்து பெரியகுளம் நகர செயலாளரிடம், தங்களது ராஜினாமா கடிதத்தையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையையும் கொடுத்துள்ளனர்.

 

இது குறித்து ராஜினாமா செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், அ.தி.மு.க. கட்சி நகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கட்சியில் நீண்ட காலமாக உள்ள கட்சி தொண்டருக்கு வாய்ப்பு வழங்க பல முறை கேட்ட நிலையில் வார்டு பொறுப்பாளர்களைக் கேட்காமல் தற்பொழுது 6- வது வார்டுக்கு அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்துள்ளனர். 

 

கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் கோரிக்கையை ஏற்காததால் கட்சி பொறுப்பு தேவை இல்லை என முடிவெடுத்து ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க. கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளோம். ராஜினாமா செய்த பொறுப்பாளர்களில் ஒருவரான சேர்ந்த லட்சுமி என்பவரை சுயேட்சை வேட்பாளராகத் தேர்வு செய்தோம். அவர்  இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்" என்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.