Skip to main content

'தேடித்தேடி திட்டங்களை செய்யும் இயக்கம் திமுக'- மாதவரத்தில் நிகழ்ந்த 'திராவிட மாடல்' கருத்தரங்கம்!

Published on 12/06/2022 | Edited on 13/06/2022

 

'Searching and making plans DMK' - Dravida model 'seminar held in Madhavaram!

 

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 'திராவிட மாடல்' கருத்தரங்கம் மாதவரத்தில் திமுக புழல் நாராயணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 

இந்த திராவிட மாடல் கருத்தரங்கத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் நா.எழிலன் எம்.எல்.ஏ, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

'நாடும் மதமும்' என்ற தலைப்பில் பேசிய சுப.வி, ''இது கூட்டம் இல்லை வகுப்பறை, நமக்கு எத்தனையோ அடையாளம் இருக்கிறது. மொழி இல்லாமல் வாழ முடியாது. ஆனால் மதம் இல்லாமல் வாழ முடியும். மதம் என்பது பழமையானது. நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது கடவுள். அந்த கடவுளின் பெயரில் மதம் உருவெடுக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டு செயல்படுவதே கடவுள் என அனைவராலும் பேசப்படும் ஒன்று. இதற்கு எதிராக அறிஞர் ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் ஒரு பந்தை விசை கொண்டு மட்டையால் அடிக்கும்போது திசைமாறி பந்து எதிர் மறையாக செல்லுமா? என்றால், செல்லாது. அடிக்கும் திசையை நோக்கித்தான் செல்லும் என்றார். ஒருவேளை பந்து எதிர் மறையாக செல்லுமாயின் நானும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்கரம் இருப்பதாக நம்புகிறேன்.

 

dmk

 

மதம் என்பது பின்புறமாக இருந்து கொண்டு நம்மை வழிநடத்துகின்றது. பின்பு பலவகையான பிரச்சனையும் உண்டாக்கிறது. நாட்டில் மதம் இருக்கலாம் ஆனால் மதம் நாட்டை ஆளக்கூடாது. அப்படி மதம் ஆண்டால் இந்த நாடு நாசமாகிவிடும் என்பதற்கு தற்போதைய பாஜக ஆட்சியே சான்று. மதத்தை விட்டு வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மதத்தின் பெயரால் பிரச்சனையை உருவாக்காமல் இருந்தாலே போதும்'' என்றார்.

 

dmk

 

டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. 'நாடும் மொழியும்' என்ற தலைப்பில் பேசுகையில், ''23 சதவீதம் பேசும் இந்தி மொழியை ஒட்டுமொத்த நாட்டின் மொழியாக மாற்ற நினைப்பதை எப்படி ஏற்க முடியும். பல மொழிகளைக் கொண்ட நாட்டின் ஒற்றை மொழியைத் திணிப்பது உரிமை மீறல். தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்கும்போதே கற்றல் அனுபவம் அதிகம் பெற்று அறிவியல் ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் உண்மை. இணைப்பு மொழியாக ஆங்கிலம் மாற்றம் தாய்மொழி என இரண்டு இருந்தால் போதும் நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்ற அடித்தளத்தை போட்டது திராவிடம். அந்த திராவிட மாடல் தற்போது இருக்கும் வரையிலும் இந்தியைத் திணிக்க முடியாது'' என்றார்.

 

dmk

 

'நாடும் ஏடும்' என்ற தலைப்பில் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் பேசுகையில், ''இந்த கருத்தரங்கம் 'திராவிட மாடல்' என்பதே, அதில் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'நாடும் ஏடும்'. முதலில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்பதே திராவிட மாடல். 14 வயதில் தமிழ் கொடியை கையில் பிடித்தவர் 94 வயதில் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற பெருமையைத் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை கைவிடாமல் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி வருகிறார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் ஸ்டாலின் தெரிவித்தது, 'எங்களுக்கு வாக்களித்த மக்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்கு செலுத்தாதவர்கள் நாம் ஏன் திமுகவிற்கு வாக்கு செலுத்தாமல் விட்டுவிட்டோம் என ஏங்கும் அளவிற்கு இந்த ஆட்சி செயல்படும்' என்றார். மக்களின் பிரச்சனைகளை களைய மக்களுடன் இருந்து செயல்படும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். சமூக சிந்தனைகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சிந்திக்க ஏடு முக்கியம். அதை நீங்கள் கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். தலைமுறை தலைமுறையாக தேடித்தேடி திட்டங்களை செய்யும் இயக்கம் திமுக. கை ரிக்ஸா ஒழிப்பு, திருநங்கை என பெயர் சூட்டி நல வாரியம் அமைத்து பொருளாதாரம் பெற வழிவகை செய்தல் என பெருமை சேர்த்தவர் கலைஞர். அப்படி பெரியர், அண்ணா, கலைஞர் என அவர்களை தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலினும் வழிநடத்தி வருகிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.