Advertisment

தேடப்பட்டு வந்த கோவை பெண்கள் விடுதி அதிபர் சடலமாக மீட்பு

kovai

Advertisment

கோவையில் விடுதி பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் விடுதி அதிபர் ஜெகன்நாதன் நெல்லை ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் என 200 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். பீளமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் காப்பாளராக புனிதா என்பவர் இருந்து வருகின்றார். இந்த பெண்கள் விடுதியில் உள்ள கல்லூரி மாணவியர் சிலரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காப்பாளர் புனிதா, பிறந்தநாள் பார்ட்டி என கூறி வெளியில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மாணவியருக்கு மது விருந்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மத்தியில் வெளியானதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும்

Advertisment

விடுதியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து காவல் துறை அங்கு வரவே விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவானார்.

விடுதி காப்பாளர் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் விடுதிக்குள் சென்று அங்கு தங்கி இருந்த மாணவிகளை நேரில் சந்தித்து பேசினர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை காப்பாளர் புனிதா தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் காலில் விடுதியின் உரிமையாளர் ஜெகதீசன் அரை நிர்வாணமாக லைனில் இருக்கும் போது அவரிடம் பேச சொல்லி மாணவிகளை வற்புறுத்தியதாகவும், கட்டிட உரிமையாளர் ஜெகநாதன் பிறந்தநாள் பார்டிக்கு மது அருந்த சொல்லி வற்புறுத்தியதும் தெரியவந்த தாகவும் மாணவிகள் தெரிவித்ததாக மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் ஜெகன்நாதனை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

jeganathan Ladies dharsana hostel kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe