சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராதாகிருஷ்ணா நகரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட சலூன் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தெந்த கடைகள் திறக்கப்படலாம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை மீறி கடைகளை, வணிக வளாகங்களை திறந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.