Skip to main content

புதுச்சேரி மாநில எல்லையில் சீல் - பேருந்துகளில் இடைவெளி விட்டு அமருமாறு அறிவுரை

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரையில் மட்டுமே பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

இந்நிலையில்  வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரிக்கு நுழை தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்ததையடுத்து இன்று காலை 7 மணி முதல் புதுச்சேரி எல்லைகளான கடலூர் மாவட்ட எல்லை கண்ணியகோயில், விழுப்புரம் மாவட்ட எல்லைகள் மதகடிப்பட்டு, கோரிமேடு, அனுமந்தை ஆகிய பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு வெளிமாநில கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 

 

Puducherry



 

தமிழகம், புதுவை பதிவெண் கொண்ட வாகனங்கள் தவிர வேறு மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேசமயம் கடலூர் பகுதியிலிருந்து சென்னை செல்லும்  பேருந்துகள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.
 

மருத்துவம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் சோதனை செய்து, கிருமி நாசினி தெளித்த பின்பே மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் புதுச்சேரி பேருந்துகள் அம் மாநிலத்துக்குள் மட்டுமே செல்கின்றன. அதேசமயம் பாதியளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இருந்த போதிலும் பேருந்துகளில் இடைவெளி விட்டு அமருமாறு நடத்துனர்கள் மற்றும் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது.  
 

இதனிடையே  மாவட்ட ஆட்சியர் அருண், ‘மாநில எல்லைக்குள் வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்பு அனுப்பப்பட்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதும் அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா’கவும் தெரிவித்தார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.