Advertisment

சங்கத்திற்கு சீல்; உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு!

vishal

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ளார்.மேலும் இதனை அவரச வழக்காக விசாரிக்கவும் வேண்டியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் உள்ளார். இந்த சங்கத்தில் தற்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை விஷாலுக்கு எதிரான அணி, தியாகராயர் நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலவலகத்திற்கு பூட்டு போட்டது.

Advertisment

இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று வந்த விஷால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரித்தனர். உடனே விஷால் தானே ஏறி போலீஸ் வேனில் அமர்ந்தார். விஷால் மற்றும் அவருடன் வந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

சட்ட விரோதமாக கூடியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் நடிகர் விஷால் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதேபோல் சங்க அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக பூட்டு போட்டதாக எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145-ன் கீழ் இரு தரப்பினரும் சங்க அலுவலகத்திற்குள் நுழைய தடை விதித்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருக்கிறார்கள்.மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் விஷால் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 145வது சட்டப்பிரிவின் கீழ் விஷால், அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ள நிலையில்,எங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் விஷால் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டுள்ளார்.இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது. இந்த புகாரை மனுவாக கொடுக்கும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Producer Association seals vishal
இதையும் படியுங்கள்
Subscribe