Skip to main content

ஆம்பூர் நகருக்கு வைக்கப்படவுள்ள சீல்...?? அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரவும் தடை!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகரில் மட்டும் ஏப்ரல் 11ந்தேதி வரை கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆகும். இவர்கள் அனைவருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

 

Seal to be set for Ambur ... ?? Come out to buy the essentials!


மாவட்டத்திலேயே அதிக கரோனா நோயாளிகள் உள்ள பகுதியாக இது இருப்பதால், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11ந்தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஏப்ரல் 13ந்தேதி முதல் ஆம்பூர் நகரம் முழுவதும் சீல் வைக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட எது வாங்குவதற்கும் அனுமதியில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தந்துவிட்டு, பணம் பெற்று செல்வார்கள் எனச்சொல்லப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி யார் வெளியே வந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

 


a

சார்ந்த செய்திகள்

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.