Skip to main content

உயிருக்குப் போராடிய கடல் ஆமை... காப்பாற்றிய வனத்துறையினர்!

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 

 
கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சென்ற நிலையில், சேதமடைந்த வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 7 வயது ஆமையை மீட்டு, மீண்டும் ஆமையை கடலில் விட்டுள்ளனர்.

sea


மன்னார் வளைகுடா அமைந்துள்ள, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகள் மட்டுமல்லாது, கன்னிராஜபுரம், மூக்கையூர், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், ஆற்றங்கரை, அரியமான் உள்ளிட்டப் பகுதிகளில் ஆமைகள் அதிகளவில் முட்டையிட்டு, குஞ்சுபொரித்து தங்களுடையை இனவிருத்தியை பெருக்கிக்கொண்டு வருகின்றன. இதற்காகவே ஆமைகளைப் பாதுகாக்க முதல் 5 நாட்டிக்கல் மைல் வரை மீன் பிடிக்க வேண்டாம். வலையில் ஆமைகள் சிக்கும் பட்சத்தில் அதனை பத்திரமாக கடலில் விடவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மீனவர்ளுக்கு வழங்கி வந்தது வனத்துறை.

 

இது இப்படியிருக்க, ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், இன்று கடலோரம் ரோதுப் பணியியனை மேற்கொண்ட வனத்துறையினர் அழகன்குளம் பகுதியில் சுற்றிவரும் போது, " கரையிலிருந்து 200 அடி தூரத்தில் கடலுக்குள் ஏதோ மிதந்து துடிப்பது போல் தெரியவர" நாட்டுப் படகு உதவியுடன் அங்கு சென்று பார்க்க, " சேதமடைந்த மீன்வலையில் 7 வயது ஆமை ஒன்று உயிருக்குப் போராடி வந்தது தெரிய வந்துள்ளது." அதனைப் பத்திரமாக மீட்ட வனத் துறையினர், மீண்டும் அதனை கடலுக்குள் விட்டனர். அதேவேளையில், " மீன்பிடிப்பின் போது சேதமடையும் வலைகளை கடலில் விடக்கூடாது என்றும், கடலில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மிதந்தால் அதனை எடுத்து கரையில் போடவேண்டும்." எனவும் மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.