Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு அரிசியில் புழு, பூச்சிகள்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

schools students foods tn govt rice

 

கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரிசி, முட்டை, சத்துமாவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (13/07/2020) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அரிசி மற்றும் பருப்பு வழங்குவதாக மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், முன்பு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் வண்டுகள், புழு, பூச்சிகள் அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த மாணவர்கள் முகம் சுளித்துக் கொண்டே அரிசியை வாங்கிச் சென்றனர். பருப்பு இருப்பு குறைவால் வழங்கப்படவில்லை.

 

தேங்கியிருந்த புழு, பூச்சி, வண்டுகளுடன் உள்ள அரிசியை மாணவர்களுக்கு வழங்கும் முன்பு ஆய்வு செய்யாமல் வழங்குவது உணவுத்துறைக்குத் தெரியாமலா நடக்கும்? புழுத்த அரிசிகளை மாணவர்களுக்கு வழங்கும் முன்பு அதைச் சற்று யோசிக்க வேண்டாமா? என்று மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.