Advertisment

9 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு!

ghj

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த புதுச்சேரியில் தற்போது கரோனா வெகுவாக குறைந்து வருகின்றது. இதனால் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe