Skip to main content

நாளை பள்ளிகள் திறப்பு.. வருகைப் பதிவு கட்டாயம் இல்லை -  ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நிர்மல்ராஜ் 

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

Schools to open tomorrow .. Attendance registration is not mandatory - Teacher Selection Board Chairman Nirmalraj

 

தமிழகத்தில் நாளை (19.01.2021)  10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

பள்ளிகளில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளார்களா என்பது குறித்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கேம்பியன் தனியார் பள்ளியில் உடல் நலம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேர்வு வாரியத் தலைவர் நிர்மல்ராஜ், “மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. வருகைப் பதிவேடு என்பது பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படாது. கண்டிப்பாக பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தோடு மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும்.

 

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 506 பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 75 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என திருச்சி நகரத்தில் 172 பள்ளிகளும், லால்குடி பகுதியில் 114 பள்ளிகளும், முசிறியில் 91 பள்ளிகளும், மணப்பாறை பகுதியில் 129 பள்ளிகளும் என மொத்தம் 506 பள்ளிகள் நாளை (19.01.2021) முதல் செயல்பட உள்ளன. 

 

மூன்று பள்ளிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பள்ளிகள் துவங்கும் நாள் முதல் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.