Advertisment

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

gjh

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நேற்று (01.11.2021) முதலே மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. தற்போது வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்துவருவதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறந்தநிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe