Schoolgirl by falling tree accident; Chief Minister Relief Notice

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

Advertisment

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் சாய்ந்ததில் இரண்டு மாணவிகள் விபத்தில் சிக்கினர். இதில் உயிரிழந்த மாணவி சுஷ்மிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.