Advertisment

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

school vans incident students cuddalore district

Advertisment

பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vans students schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe