Skip to main content

பள்ளி வேன் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

NN

 

தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பள்ளி வேனில் சென்ற நான்கு குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடன இயக்குநர் பிருந்தாவிற்கு படப்பிடிப்பில் விபத்து

dance master brinda injure in shooting spot

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. இயக்குநராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஹே சினாமிகா, தக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. இப்போது தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ‘கண்ணப்பா’ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நியூசிலாந்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. 

இந்த படப்பிடிப்பில் பிருந்தா நடனமைக்கும் பாடல் படமாக்கப்பட்டு வந்தததாக கூறப்படும் நிலையில், தற்போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் அவருக்கு அடிபட்டுள்ளதாகவும் அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 30 குழந்தைகள் காயம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
School bus overturned iccident 30 children injured

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மூங்கில்பாடி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் மூங்கில்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் சின்ன சேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். மேலும் சின்ன சேலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயமடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.