Skip to main content

மாணவனின் டி.சி-ஐ வீசி எறிந்த பள்ளி; தலையிட்ட நக்கீரன்; அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
தரையில் வீசப்பட்ட மாற்றுச் சான்றிதழ்

 

திருச்சி மாவட்டம், முசிறியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு வயது மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் தினமும் பள்ளி பேருந்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள் அந்த மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமரவைத்துவிட்டு, அவரின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம், ‘மாணவன் இன்னும் பேருந்து கட்டணம் செலுத்தாததால் பேருந்தில் ஏற்றமுடியாது’ என்று கூறியுள்ளனர். அப்போது, மாணவனின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோரை ஒருமையில் பேசியுள்ளது. அதன் பிறகு மாணவனின் மாற்றுச் சான்றிதழை தூக்கி வீசியுள்ளது. 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
கோப்புப் படம்

 

இந்தச் சம்பவம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நக்கீரன் விசாரணை நடத்தியது. அதன் பிறகு முழு விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்து சென்றோம். விவரத்தை முழுமையாக கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயம் முழு விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உடனடியாக திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வி அதிகாரிக்கு (சி.இ.ஓ) இந்த விவகாரத்தைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவை அடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட சி.இ.ஓ சென்று விசாரணை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்தை எச்சரித்தார். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவும், மாணவனை பள்ளி வாகனத்தில் வர அனுமதிக்கவும், பெற்றோருக்கு வேறு வழியில் எந்தப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார். 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம்

 

மாவட்ட சி.இ.ஓ.வின் உத்தரவை அடுத்து பள்ளி நிர்வாகம், ‘மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்தது தவறு என்று ஒப்புக்கொண்டது. பள்ளி நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளியில் தொடர்ந்து பயில முழுமையாக சம்மதிக்கிறது. வழக்கம்போல் சாலப்பட்டிக்கு பள்ளி வாகனம் அனுப்பப்படும். 


மாணவனின் பெற்றோர் இனி எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்போம் என உறுதியளித்தனர்’ என்று தங்களது மன்னிப்பு அறிக்கையில் தெரிவித்தனர்.  

 

இதுகுறித்து மாணவனின் தாய் கலைச்செல்வி கூறுகையில் பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வரலாம் என்று உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.