school teacher Viral video

இயற்பியல் வகுப்பிற்குவராமல் கட் அடித்துச் சுற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை தரையில் முட்டிப்போட வைத்து, ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்றாகும். சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் இயற்பியல்வகுப்பை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இரண்டாவது வகுப்பானஇயற்பியல் வகுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றுள்ளனர்.இதனால், அந்த மாணவர்கள் வசிக்கும் அடூர் கிராமத்திற்குச் சென்று தேடிய ஆசிரியர்கள், அம்மாணவர்களைக் கையோடு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c18d9fdb-3023-4197-aa2a-4f12d6771c69" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_70.jpg" />

Advertisment

இதனைக் கண்டிக்கும் விதமாக, அம்மாணவர்களைக் கரும்பலகையின் கீழே முட்டிப் போட வைத்துள்ளார் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன். அதில், ஒரு மாணவர் ஆசிரியரிடம் எதிர்த்துப் பேசியதாகவும் அதைக் கண்டு அங்கிருந்த மாணவர்கள் சிலர் சிரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுப்பிரமணியன், கையில் வைத்திருந்த பிரம்பால் அந்த மாணவனைத் தாக்கியுள்ளார். அத்துடன், கால்களால் அம்மாணவனை எட்டி உதைத்துள்ளார். இதை கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் உள்ளனர். இதனால் இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் வரை சென்றுள்ளது.

மாணவனை ஆசிரியர் இப்படி மூர்க்கமாகத் தாக்கியது எப்படி தவறோ அதேபோல, படிக்கும் வயதில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தவறுதான். அதேசமயம், பள்ளிக்கு செல்ஃபோன் கொண்டுசெல்ல தடை இருக்கும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் ஃபோனை கொண்டு சென்றது எப்படி எனும் கேள்வியும் எழுந்து நிற்கிறது.