Skip to main content

பதம் பார்க்கும் பனை மட்டை... மாணாக்கர்களே வெட்டி வரும் அவலம்!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

காய்ந்த பனை மட்டைகளை செதுக்கி, குச்சியாக தயார் செய்து மாணாக்கர்களை பதம் பார்த்து வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள். இது கண்டிக்கத்தக்க வேதனை எனினும், இதற்காகவே பள்ளி சீருடையுடன் மாணாக்கர்களை காடுகளுக்கு அனுப்பி பனை மட்டைகளை வெட்டி சேகரித்து வருவது வேதனையிலும் வேதனை என்கின்றனர் அவ்வூர் மக்கள்.

the school students will be cutting has palm tree peoples shock


 

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்திலுள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. 6ம் வகுப்பு தொடங்கி 12ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 352 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், கணினி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் என சுமார் 28 ஆசிரியர்களை கொண்டு இயங்கும் இப்பள்ளியில் மாணாக்கர்களை தண்டிக்க பனை மட்டைகளை பயன்படுத்துக்கின்றனர் என்கின்ற குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களாகவே உண்டு. 
 

பள்ளி நிர்வாகமும் மறுத்து வந்த நிலையில், இன்று காலையில் பள்ளியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள வடக்கு சாலைக்கிராமத்தின் வயல்காடுகளில், கையில் நீண்ட அரிவாளுடன் பனைமரம் ஏறி பனை மட்டையை சேகரம் செய்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியின் இரு மாணவர்கள். பள்ளி சீருடையுடன் பனை மட்டை தயார் செய்த அவர்களோ., " பசங்களை அடிப்பதற்காக சார் தான் கொண்டு வர சொன்னார்." என்கின்றனர் நம்மிடம்.! இத்தகவல் மாணாக்கர்களின் பெற்றோர் தரப்பை சென்றடைய, மாவட்ட கல்வி அதிகாரியை நாடவுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.