Skip to main content

பள்ளி ஆசிரியை குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த பள்ளி மாணவர்கள் கைது!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

செல்போன் இன்றைய பள்ளி மாணவர்களின் வக்கிர தன்மை உள்ளவர்களாக  மாற்றி வருகிறது என்பதற்கு வையம்பட்டியில் ஆசிரியை குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை தான் உதாரணம். 

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ஆவாராம்பட்டி என்கிற கிராமம் உள்ளது. அங்கே ஆசிரியர் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பள்ளிமாணவர்கள் 3 பேர் ஆசிரியை வீட்டில் குளிக்கும் போது குளியல் அறையில் உள்ள கண்ணாடி வழியே செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதே போன்று எடுத்திருக்கிறார்கள். 

 

teacher

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் ஆசிரியை வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது கண்ணாடி ஜன்னல் வழியே யாரோ நம்மை பார்பது போன்று உணர்ந்த ஆசிரியர் சத்தம் போட்டிருக்கிறார். அந்த நேரத்தில் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்கள். இதனால் ஆசிரியை அதிர்ச்சியடைந்து ஏதும் வீடியோ எடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகம் அடைந்து ஆசிரியை பக்கத்து வீடுகளில் வசிக்கும் மாணவர்களை அழைத்து கண்டித்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் தங்களுக்கு எதுவும் சம்மந்தம் இல்லை என்பது போல் நடந்திருக்கிறார்கள்.

 

அடுத்த சில நாட்களில் ஆசிரியையின் வீட்டிற்கு அவரின் உடலில் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வர்ணித்தும், அந்த படமும் வீடியோவும் இருப்பதாக ஒரு கடிதம் எழுதி ஆசிரியையின் வீட்டின் உள்ளே போட்டு ஆசிரியைக்கு இன்னும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியையின் இந்த பீதியை பார்த்து மாணவர்கள் ரசித்திருக்கிறார்கள். 

 

அந்த கடிதத்தை பார்த்த ஆசிரியையும் அவரது கணவரும் அதிர்ச்சியடைந்து இனியும் வெளியே சொல்லாமல் விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்து வையம்பட்டி காவல் ஆய்வாளரிடம்  புகார் கொடுத்திருக்கிறார்.

 

விசாரணையில் மாணவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்ததில் வீடியோ எடுத்தது உண்மை என்றும். அவர்கள் ஆசிரியை மட்டும் அல்ல குளியல் அறையில் சத்தம் கேட்கும் பொழுதுதெல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ எடுப்பதையே வழக்கமாக கொண்டிருப்பது அந்த வீடியோக்களை பார்த்தபோது தெரிய வந்தது. அவர்கள் 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

 

மாணவர்கள் 3 பேரும் அந்த ஆசிரியையின் பள்ளியில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மணப்பாறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த மாணவர் தான் எடுத்த வீடியோவை 12-ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரர் மற்றும் 16 வயதுடைய மற்றொரு மாணவருக்கும் காண்பித்துள்ளார். அந்த காட்சியை 3 மாணவர்களும் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.