Advertisment

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்ற சிறுமி, மாலை தோப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். அப்போது தோப்பு பகுதியில் ரத்த காயங்களுடன் கிடந்த சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

Advertisment

SCHOOL STUDENTS INCIDENT POLICE INVESTIGATION SHOCKING

உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியர் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதில் நீண்ட நாட்களாக சிறுமியை கண்காணித்து வந்தேன் என்று கூறினார். நேற்று மாலை சிறுமி வீட்டிற்குப் பின்புறம் செல்லும் பொழுது, சிறுமியை பின் தொடர்ந்து, சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்றேன். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன்என்று கல்யாணசுந்தரம் போலீசாரிடம்வாக்கு மூலம் அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Police investigation incident SCHOOL STUDENTS Nagai district Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe