Skip to main content

காவல்துறையை சுத்தலில் விட்ட பள்ளி மாணவன் - அரையாண்டு தேர்வுக்கே இவ்வளவு பயமா?

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

The school student who left the police in the lurch - so afraid of mid-term exams?

 

சென்னையில் தனியார் பள்ளி மாணவன் ஒருவன் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவன் திட்டமிட்டே தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

 

நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் சர்மா என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், 'கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார் சர்மா ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். எப்பொழுதும் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் தனது மகனை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவார். ஆனால் நேற்று மிதிலேஷை ஆட்டோ அருகே நிறுத்தி வைத்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் மற்ற மாணவர்களை அழைத்து வரச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் தனது மகன் ஆட்டோவில் கடத்தப்பட்டார். அதன் பிறகு பச்சையப்பாஸ் காலேஜ் சிக்னல் அருகே ஆட்டோவில் இருந்து வெளியே குதித்த எனது மகன், அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து காவலர் ஒருவரிடம் இருந்து செல்போனை வாங்கி தாத்தாவிற்கு தான் கடத்தப்பட்டதாக கூறினான். பின்னர் அவன் மீட்கப்பட்டான். தற்பொழுது மகன் பயந்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பள்ளியின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் சொன்னதாகக் கூறப்பட்டது போன்று கடத்தப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகமடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவன் மிதிலேஷை  நேரில் அழைத்து விசாரித்தனர். அப்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வுக்கு பயந்து பள்ளிக்குச் செல்லமாட்டேன் என பலமுறை பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்ததால், தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியதாகவும், அப்படிச் செய்தால் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்ப மாட்டார்கள் என திட்டமிட்டு நடித்ததாகவும் தெரிவித்துள்ளான். பின்னர் மாணவனை எச்சரித்த போலீசார் அவனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.