Skip to main content

பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தற்கொலை

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

 

student

 

பட்டுக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவரது மகன் சந்தோஷ்ராஜா (வயது 17) . இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். பள்ளியில் ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி, பள்ளியின் இயற்பியல் பாட ஆசிரியர் ராஜா என்பவர் பெற்றோரை அழைத்து வருமாறு திங்கள் கிழமை மதியம் பள்ளியை விட்டு வெளியில் அனுப்பி உள்ளார். 


இதனால் மனம் உடைந்த மாணவர் சந்தோஷ்ராஜா பெரியகோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி முன்பு அதிராம்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர் பள்ளிக்குள் நுழைந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். ஆசிரியர் ராஜா தலைமறைவாகி விட்டார். பள்ளி முதல்வர் ராம்தாஸ் செல்லையாவை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

 

டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர்.

 

- பகத்சிங்
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கு பீரோ வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள்!!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராம மக்கள் அரசு தொடக்கள் பள்ளியில் பருவத் தேர்வுகளிலும் வருகைப் பதிவு அடிப்படையில் 47 மாணவர்களை தேர்வு செய்து பீரோக்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

47 students from government elementary school bought bureau


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 பேர் மருத்துவர்களாகவும், பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பலதுறை அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிக்கு அரசு ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்கள், 5 கணினி போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். அதனால் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன் கடந்த 2018 ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளும்  பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வர கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் இணைந்து வேன் வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், வருகை பதிவு, அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு பெற்றோர் ஆசிர்யர் கழக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறாரா என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை 19 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதேபோல 2019 ம் ஆண்டு டேபிள் மேட் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆண்டுவிழா நேற்று சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன், செரியலூர் ஜெமின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குழ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த  விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சந்திரா வரவேற்றார். 

 

47 students from government elementary school bought bureau


முதல் வகுப்பு மாணவி அகிலாஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் பருவத் தேர்வுகள், பள்ளி வருகை பதிவு, பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 47 மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சதுரங்கப் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் சாதித்த மாணவர்கள், மற்றும் கல்வி, விளையாட்டு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை பாpசு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளி ஆசிரியர் அருண் நன்றி கூறினார். கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து அரசுப் பள்ளியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், வெளிநாடு வாழ் தொழிலதிபர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதுடன் மாணவர்களின் கல்வித் திறனும், விளையாட்டு, கலை திறன்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

 

Next Story

"அப்பா... நீ குடிக்கிற... எனக்கு கொள்ளி வைக்காதே..." டாஸ்மாக்கை மூட உயிரை கொடுத்த மாணவன்!

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
dinesh kumar

நெல்லை மாவட்டத்தின் குருக்கள்பட்டி அருகே உள்ள கே.ரெட்டிபட்டி கிராமத்தின் விவசாய கூலியான மாடசாமி, இசக்கியம்மாள் தம்பதிக்கு தினேஷ்குமார் பாலசந்திரன் என இரண்டு மகன்கள். வேலை வெட்டிக்கு போகும் தந்தை மாடசாமியோ குடிப்பழகத்திற்கு அடிமையானதால் கிடைக்கும் கூலியை குடியிலேயே காலி பண்ணிவிடுவார். இதனால் தன் கணவனை கண்டித்தே ஒய்ந்துபோன தாய் இசக்கியம்மாள் தன் வருமானத்திலேயே தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்.
 

கடந்த 2008ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தாய் இசக்கியம்மாள் மரணமடைய, தந்தை மாடசாமியோ குடியால் பிள்ளைகளைக் கவனிக்காமலேயே இருந்துள்ளார். தினேஷ்குமாரும் தம்பியும் நிற்கதியானார். இதனிடையே மாடசாமி 2வது திருமணம் செய்துக் கொண்டார். அதன் மூலம் முத்துச்செல்வி என்ற மகளும் உண்டு.

தினேஷ்குமாரும் அவனது தம்பியும் அனாதையான நிலையில், படிப்பதற்குரிய சூழல் இல்லாததை கண்டு, மதுரையில் ஆசிரியர் பணியிலிருக்கும் அவனது சித்தப்பா சங்கரகுற்றலாம் தன் பராமரிப்பிற்கு அவர்களை கொண்டு வந்ததோடு, தினேஷை நாமக்கல் மாவட்டம் ஆண்டலூரிள்ள விகாஷ் மெட்ரிக் பள்ளியிலும், தம்பியை மதுரையிலுள்ள பள்ளியிலும் படிக்க வைத்திருக்கிறார்.
 

தந்தை மறுமணம் செய்ததால், சித்தியோ சரியாக கவனிக்காததோடு, அவர்களுக்கு சாப்பாடு கூட முறையாக தருவது இல்லையாம். இதன் காரணமாக தினேஷ் கிராமத்திற்கு விடுமுறையில் எப்போதாவது வந்து போவான். அப்போது கூட அவன் குடிக்க வேண்டாமென்று தன் தந்தையை கண்டித்ததோடு அவரோடு வாக்குவாதம் பண்ணியிருக்கிறார்.

 

dinesh kumar


 

இதனிடையே +2 பரீட்சையை நெல்லை சென்டரில் எழுதி தினேஷ் மதுரையிலுள்ள தன் சித்தப்பா வீட்டிற்கு போனவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிபட்டிக்கு வந்திருக்கிறான். அது சமயம் குடிப்பதற்கு பணமில்லாமல் தவித்த தந்தை மாடசாமி, அவனது சட்டைபையில் இருந்த 1500 ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார். அதைக் கண்ட தினேஷ் அவரிடமிருந்த பணத்தை பிடுங்கியதோடு, பணம் தரமாட்டேன் சித்தப்பா என் செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்து செல் வாங்க வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு தினேஷ் பணத்தோடு வெளியேறியுள்ளார். மேலும் திருந்தாத தன் தந்தையின் நிலை அவனை மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது. அதே கவலையில் சென்னை சென்று தன் உறவினர்களை பார்த்து விட்டு மனம் ஒடித்த நிலையில் நெல்லைக்கு வந்தவன் பாளை தெற்கு புறவழிச் சாலையிலுள்ள மேம்பாலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

அவனுடைய உயிர் போனதுமில்லாமல் அவன் எழுதிய உருக்கமான கடிதம்தான் பாறை மனதையும் நொறுக்குவதாக இருந்தது.

 

dinesh kumar


 

''அப்பா நீ திருத்தமாட்ட, எனக்கு கொள்ளி வைக்காதே. நீ கொள்ளி வைச்சா என் மனசு ஆறாது. சித்தப்பா மணிதான் எனக்கு கொள்ளி போடனும். இனி எந்த ஒரு தந்தையும் குடிக்கக் கூடாது. பாரத பிரதமரே, சாரய கடையை அழியுங்கள். மூட முடியலையா, நான் ஆவியா வந்து குடிப்பவங்களை பயமுறுத்துவேன். மதுக்கடைகளை அடைப்பேன். இது சத்தியம்'' என்று மரண சாசனம் எழுதியிருக்கிறார்.

தினேஷின் மாமா சங்கரலிங்கம், ''அவன் ஊருக்கு வந்தா எங்க வீட்டுல இருப்பான். இங்கதான் அவனுக்கு சாப்பாடு. அவன் அப்பனை கண்டிச்சும் அவன் குடியை நிறுத்தல. நல்லா படிக்கிற பையன். ஒழுக்கமான பையன் படிப்பில் முதல் ரேங்க்ல வரவேண்டிய பையன். இந்த முடிவுக்கு போயிட்டானே என கண் கலங்கினார்.
 

இனி மேலாவது அரசுக்கு உரைக்குமா...