Skip to main content

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம்! 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

school student srimathi incident police in cuddalore district

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6- ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார். தற்போது 12- ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த ஜூலை 13- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

 

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 14- ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன் ஆய்வு அறிக்கையில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. 

 

இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் பெற்றோர்கள் இடத்தில் எழுந்தது. அதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி மனு தொடுத்தனர். இதற்கிடையில் கடந்த ஜூலை 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவி மரணத்திற்கு நீதிக் கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 

school student srimathi incident police in cuddalore district

50- க்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. அதேசமயம், பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18- ஆம் தேதி அன்று பள்ளி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, ஜூலை 19- ஆம் செவ்வாய்க்கிழமை அன்று மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 

 

இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரைச் சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

இந்நிலையில் நேற்று (22/07/2022) பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள் கடந்து இன்று (23/07/2022) காலை 07.00 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மாணவியின் சொந்த கிராமமான பெரியநெசலூருக்கு சடலம் கொண்டு வரப்பட்டது.  எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி தலைமையில் சுமார் 700- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அக்கிராமத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.  மேலும் கண்ணீர் புகைக்குண்டு வாகனம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா ஆகிய வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

school student srimathi incident police in cuddalore district

கடுமையான பரிசோதனைக்கு பிறகே வாகனங்களை கிராமத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் சரியாக, காலை 11.00 மணியளவில் மாணவி ஸ்ரீமதிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

 

இறுதிச்சடங்கில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இடுகாடு வரை  ஊர்வலமாக வந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் இடுகாட்டில் மாணவியின் உடலுக்கு அவரது பெற்றோர்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்த பின்பு மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.