Skip to main content

“நாம தமிழ்நாடு; இந்தியா ஒன்றியம்” - ஆளுநர் பேச்சுக்கு பள்ளி மாணவர்கள் தடாலடி

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

school student say thamizhagam not Tamil Nadu

 

“அப்ப நம்ம மாநிலத்தோட பேரு தமிழ்நாடுதானா? சரி இன்னொரு கேள்வி கேட்கவா?” எனத் தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தன்னுடைய பெயரிலேயே நாடு என்ற பெருமையைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். பல்வேறு தனித்துவங்களையும், பழமையான வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இதற்கு, கடந்த 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனப் பேசியிருந்தார். இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹேஷ்டேக் தமிழ்நாடு என ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

 

இந்நிலையில், பள்ளி மாணவர்களோடு சேர்ந்துகொண்டு ஆசிரியை ஒருவர் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒருவர், “இந்த மாநிலத்தோட பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் தமிழ்நாடுதான் மிஸ் எனக் கூறுவார்கள். இந்தியாவோட மேப்ல என்ன எழுதியிருக்கும். அதுலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ். அதுல மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ் எனக் கூறியிருப்பார்கள். அப்ப நம்ம மாநிலத்தோட பேரு,  தமிழ்நாடுதானா? சரி அப்ப நா இன்னொரு கேள்வி கேட்குறேன்... அதுக்கு சரியா பதில் சொல்றிங்களானு பாப்போம்... இந்திய அரசியலமைப்பு சட்டத்துல இந்திய நாடுன்னு இருக்குமா... இந்திய ஒன்றியம்னு இருக்குமா? எனக் கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் சற்றும் யோசிக்காமல், இந்திய ஒன்றியம்னுதான் எழுதியிருக்கும்” எனத் தடாலடியாகக் கூறுகிறார்கள். தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

- சிவாஜி 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.