Skip to main content

பள்ளி மாணவன் படுகொலை - கிராம மக்கள் அதிர்ச்சி! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

School student passed away police investigation

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பத்தி நல்லூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன், லலிதா தம்பதிக்கு மணிகண்டன், முருகன் என இரண்டு ஆண் பிள்ளைகள். இவர்களின் தாய் லலிதா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு சில மாதங்களில் மதியழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மேலும், தனது இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு அவரும் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.


அதனைத் தொடர்ந்து மணிகண்டன் அதே ஊரில் உள்ள தனது தந்தை வழி பாட்டி பாப்பாத்தியுடன் தங்கி படித்து வந்துள்ளார். முருகன் தனது பெரியம்மா ஊரான அமிர்தராயன்பேட்டைக்கு சென்று தனது சித்தி வீட்டில் தங்கி படித்து வருகிறார். 


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு முடித்த மணிகண்டனை அவரது பாட்டி பாப்பாத்தி பிளஸ் ஒன் படிப்பதற்காக அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்ததோடு அங்குள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கவைத்து வந்துள்ளார். தற்போது தேர்வு நடந்து வருவதால் அதற்காக வீட்டில் வந்து தங்கி படித்து தேர்வு எழுதி வந்துள்ளார் மணிகண்டன். நேற்றிரவு தனது பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் தாய் தந்தை ஏற்கனவே வசித்து வந்த வீட்டுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் மணிகண்டன் எழுந்துவராததால், அவரது பாட்டி அந்த வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் இரத்த வெள்ளத்தில் மரணமடைந்திருந்தார். 


இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, சத்தம்போட்டு அழுதுள்ளார். அவரின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது மணிகண்டன் தலையில் கல்லை போட்டு நசுக்கபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக தா.பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவன் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.