Skip to main content

பள்ளி மாணவரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பல்... கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேரந்த வினோத்குமார். இவருடைய மூத்த மகன் சஞ்சய் வயது 14, இவன் புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.தினந்தோறும் அனுசுயா நகரில் டியூசனுக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு ஏழு முப்பது மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி வரை  சிறுவன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வினோத்குமார் சஞ்சய் டியூஷன் படிக்கும் இடத்தில் சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கு சஞ்சய் ஏழு முப்பது மணிக்கே கிளம்பி விட்டதாக தெரிவித்தனர். 

 

yy

 

இந்தநிலையில் சஞ்கசய் தந்தைக்கு ஒரு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் மகன் வேண்டும் என்றால் பத்து லட்சம் பணத்தோடு வாங்க என்று கூறியுள்ளனர். சஞ்சய் காணாமல் போனது உறுதி செய்யப்பட்ட பிறகு  போலீசில் தனது மகன் காணாமல் போனது குறித்து புகார் செய்தார் வினோத்குமார்.

கடத்தி வந்தவர்கள் போதையில் இருந்த  சூழ்நிலையில் அங்கிருந்து தப்பித்த சஞ்சய் சண்முகபுரம் அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்க, ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின் படி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனிடம் விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் தன்னை காரில் கடத்தி சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருந்தார், 10 லட்சம் கொடுத்தால்தான் உன்னை விடுவேன் என மிரட்டினர். அங்கிருந்து நைசாக தப்பித்து வந்து விட்டேன் என மாணவன் கூறியுள்ளான்.

உடனே போலீசார் சிறுவனை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு சென்று அங்கு இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது, கடத்தலில் ஈடுபட்டவர் அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் மசூதி  தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான லோகேஸ்வரன் என தெறியவந்தது. சிறுவனை வைத்து பணம் பறிப்தே எங்களின்  நோக்கமாக இருந்தது. ஆனால் எப்படி தூங்கினோம் என்றுதான் தெரியவில்லை அந்த சமயத்தில் தான் தப்பித்து விட்டான் என கூறியுள்ளனர்.

பின்னர் போலீசார் இருவரையும் ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி ராஜமங்கலம்  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்  வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை செய்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.