Skip to main content

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - காய்கறி வியாபாரியை கைது செய்த காவல்துறை!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

school student incident police investigation

 

சேலம் அருகே, பள்ளி மாணவிக்குத் திருமண ஆசைக் காட்டி, கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரியைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

 

சேலம் மாவட்டம், குப்பனூர் அருகே உள்ள கொட்டாளூரைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). மினி டெம்போ வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

 

காய்கறி வியாபாரத்திற்காக சர்க்கரை செட்டிப்பட்டி கிராமத்திற்கு அடிக்கடி சென்றுவந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவருடன் சதீஷூக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை வலையில் வீழ்த்துவதற்காக அவருக்கு மட்டும் பணம் வாங்காமல் காய்கறிகளைக் கொடுத்துள்ளார். 

 

ஒருகட்டத்தில் தன் பக்கம் சாய்ந்துவிட்ட அந்த மாணவியிடம், தனக்குத் திருணமாகி, மனைவி, குழந்தைகள் ஆகியோர் இருப்பது குறித்த விவரங்களை மறைத்துவிட்டார். 

 

சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக சதீஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதை நம்பிய சிறுமி, கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி வீட்டைவிட்டு சதீஷூடன் ஓடிச்சென்றுவிட்டார். 

 

மகள் மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். விசாரணையில், சதீஷ்தான் மாணவியைக் கடத்திச்சென்றார் என்பதும், சேலத்தில் தனியாக ஒரு வீடு எடுத்து அங்கு சிறுமியை அடைத்து வைத்து, பலமுறை கட்டாய பாலுறவு கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து, பதினெட்டு வயது நிரம்பாத சிறுமியைக் கடத்திச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சதீஷ் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைதுசெய்தனர். அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.