Skip to main content

இளையராஜாவுடன் பொங்கல் கொண்டாடிய பன்னாட்டுப்பள்ளி குழந்தைகள்...!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

சமீபகாலமாக தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா, ஆங்கில புத்தாண்டைக்கொண்டும் அளவிற்குகூட கொண்டாடமல் சம்பிரதாய விழாவாக கொண்டாடும் நிலையாகிவருகிறது. இளைய தலைமுறையினர் தமிழர் திருநாளின் அருமை, பெருமைகளை அறியாமலும், அறிய வழிவகை இல்லாமலும் ஆங்கிலக்கல்வி மோகத்தால் மடைமாற்றப்பட்டுவருகின்றனர்.

 

pongal

 



ஆங்கிலப் புத்தாண்டை ஆடம்பரமாக கொண்டாடும் தமிழ் சமூகமும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தமிழர்களின் வீரத்தையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுக்கும் பொங்கல் விழாவை கொண்டாட மறுக்கும் சூழலில் அதை உடைத்தெறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை, கிராமிய மோகம் கலந்த பிரபலங்களை அழைத்து, சுற்றியுள்ள கிராம மக்களோடு மாணவர்களும், ஆசிரியர்களும் பிரமாண்டமாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறது விவேகானந்தா மற்றும் வீட்டா வெர்சிட்டி பன்னாட்டு கல்வி குழுமம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் அமைந்துள்ளது வீட்டா வெர்சிட்டி பன்னாட்டுப்பள்ளியும், விவேகானந்தா மழலையர் பள்ளியும். அந்த பள்ளியை சுற்றிலும் இயற்கை மனம் கமழும் விவசாயமே பிரதானமாக இருக்கும். அதன் சுற்றியுள்ள கிராமத்து குழந்தைகளும் மற்ற பகுதியை சேர்ந்த கிராமப்புற குழந்தைகளும் நகரத்து குழந்தைகளுக்கு நிகராக படிக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு குறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்தி வருகிறது அந்த பள்ளி நிர்வாகம்.


 

pongal



அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரியத்தில் துறைகளில் பிரபலமாகியிருக்கும் பிரபலங்களை அழைத்து பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நிகழ்ச்சியின் நாயகனாக கிராமிய பாடகர் கானா இளையராஜா வந்திருந்து மாணவர்களோடு பாடி,ஆடி மகிழ்ந்தார்.

தமிழனின் அடையாளமும், பாரம்பரியம் குறையாத வகையில் மொத்தநிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தது பார்ப்பவரை மனமகிழவே செய்தது. பள்ளியின் நுழைவு வாயிலை கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு வளைவுகளாக அமைக்கப்பட்டிருந்தனர். மேடையோ விவசாயமுறையான ஏறுதழுவுதல், நடவு நடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என இந்தமண்ணின் மகிமையை பறைசாற்றும் விதமாக அமைத்திருந்தனர். மேடைக்கு அருகே பசுமாடு, காளைமாடு, ரேக்ளா வண்டி, கட்டை வண்டி, குதிரை வண்டி, உள்ளிட்டவற்றை அலங்கறித்து நிறுத்தியிருந்தனர். காளையை அடக்குதல், கபடி விளையாடுதல், போன்றவற்றை அலங்கரிக்கப்பட்டு மேடையின் முன்பு வைத்திருந்தனர்.

 

 

pongal

 

 

நிகழ்ச்சியின் துவக்கமாக பச்சரிசி, நெல், பயறுவகைகள்,என நம்மண்ணில் விளையும் தானியங்களை பறப்பிவைத்து இயற்கைக்கு வணக்கமிட்டு பொங்கல் வைத்து, பானை பொங்கியதும் பொங்கலோ பொங்கள், பொங்களோ பொங்கள் என கூடிநின்று குதுகலமாகினர். பிறகு ஆசிரியைகளும், பெண் குழந்தைகளும் கயிறு இழுத்தல் இசை நாற்காலி, உரிஅடித்தல் என ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை காட்டி கலக்கினர்.  ஆண்கள் கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பம் சுழற்றுதல் என விளையாடினர்.சிறப்பு விருந்தினரான பாடகர் ஆந்தக்குடி இளையராஜாவோ கிராமியப்பாடல்களைபாடி மாணவர்களோடு ஆடி மகிழ்வித்தார். ஆங்கில பள்ளியில் இப்படி ஒரு விழாவா என்பதே அப்பகுதியின் மக்களின் பேச்சாக பொங்கல்விழா அமைந்தது.

இது குறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷீம், அவரது துணைவியாரும் கூறுகையில்," எங்கள்பள்ளி பண்ணாட்டுப்பள்ளியாக இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்து ஒருபோதும் மாறிவிடக்கூடாது என்பதை மாணவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சொல்லவே இந்த விழாவை நாங்கள் ஆண்டு தோறும் நடத்திவருகிறோம். வரும் காலத்தில் இன்னும் சிறப்பாக இந்தவிழா அமையும். ஒவ்வொரு குழந்தைகளும் தமிழர்களின் உடையான பாவாடை தாவணி வேட்டி சட்டையில் வந்து மகிழ்வித்தது எங்களை இன்னும் ஆர்வமடைய செய்கிறது" என தெரிவித்தார். 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.